அமெரிக்க டியூக் பல்கலைக்கழக நிபுணர்கள் எலி ஒன்றை வைத்து ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். சீனாவில் பெய்ஜிங் நகரத்தில் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளதால் காற்றில் அதிக அளவு மாசு கலந்துள்ளது. அங்கு வசிக்கும் கர்பிணி எலியை ஆராய்ச்சி செய்ததில், எலிகளின் நுரையீரல் மற்றும் கல்லீரலில் வீக்கமும் அலர்ஜியும் ஏற்பட்டது. உடலில் கொழுப்பு அதிகரித்து எடை அதிகரிக்கப்பட்டது. இன்சுலின் பிரச்சனையால் இரண்டாம் வகை நீரிழிவு நோய் ஏற்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. மாசு கலக்காத காற்றை சுவாசித்த எலியை வைத்து சோதித்ததில் எந்த குறைபாடும் எலிக்கு இல்லை. எனவே மாசு கலந்த காற்றை சுவாசித்தால் உடலில் எடை கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
No comments:
Post a Comment